Tuesday, September 16, 2008

மறுபடி உன் நினைவுகள்...........

நீ முகம் திருப்பி நடந்த போதே

நான் முடிவெடுத்தேன்

மற்ந்து விடுவதென

கைபேசியில் உன் சிணுங்கல்கள்

காதலர் தின வாழ்த்து அட்டைகள்

கடிதத்தில் கவிதைகள்

நீ தெரிந்தெடுத்த சட்டைகள்

சின்ன சின்ன பரிசுகள்

எல்லாம் சுருட்டி கடலில் வீசிவிட்டேன்

திரும்பி நடந்த போது

சிரித்த படி எதிரே

கடலை விற்கும் கடற்கரை பையன்

" அக்கா வரலீங்களா சார் "

சே !... மறுபடி உன் நினைவுகள்...........

No comments:

Post a Comment