Monday, September 29, 2008

விண்வெளிக்கு லிப்ட் பயணம் ஜப்பான் விஞ்ஞானிகள் அபாரம்

விண்வெளிக்கு செல்லும் லிப்ட்டை, உலகிலேயே முதல் முறையாக ஜப்பான் விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர்.உலகம் முழுவதும், பல்வேறு துறை விஞ் ஞானிகளுக்கும், விண்வெளி குறித்து பல கனவுகள் உள்ளன. அதில் கற்பனைக்கு எட்டாத கனவாக, விண்வெளிக்கு ஒரு லிப்ட் என்பது இருந்தது. அது நிறைவேறும் தருணம் வந்துள்ளது.ஜப்பான் விஞ்ஞானிகள் எளிதாக இதை வடிவமைத்துள்ளனர். பூமியுடன் சேர்ந்து சுற்றும் செயற்கைக் கோள் ஒன்று விண்ணில் நிறுத்தப்படும்.




பூமியில் இருந்து, மிக வலுவான, அதே சமயம் பெரிதும் எடை குறைவான கேபிள்கள், செயற்கைக் கோளுடன் இணைக்கப்படும். பூமியில் இருந்து பெரிய லிப்ட் இயக்கப்படும். இதில், ஏராளமானோர் பயணம் செய்யலாம்; சூரிய ஒளி ஜெனரேட்டர்களை எடுத்துச் செல்லலாம்; கதிர்வீச்சு கழிவுப்பொருட்களை அடைத்து எடுத்துச் செல்லலாம். எத்தனை லிப்ட்கள் வேண்டுமானாலும் இயக்கலாம்."புவியீர்ப்பு சக்தியை முறியடித்து, லிப்டை இயக்குவது சிரமமான காரியம் அல்ல' என்று, ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.



அதற்கு அதிக சக்தி தேவைப்படாது. இன்னும் சொல்லப்போனால், விண்கலத்தை ஏவு வதற்கு தேவைப்படும் சக்தியை விட, 100 மடங்கு குறைவான சக்தி இருந்தால் போதும். "வெளிநாடு செல்வது போல, யார் வேண்டுமானாலும், லிப்ட் மூலம் விண்வெளிக்கு செல்ல முடியும்' என்று கூறினார், இத்திட்டத்தின் தலைவர் சுயுசி ஒனோ. இந்த திட்டம், நாசா உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் உட்பட, சர்வதேச அளவில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. விண் வெளி லிப்ட் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு, இதற் கான வடிவமைப்பை சிறப்பாக தயாரித்து அளித்தால், கவர்ச்சிகரமான பரிசுகளும் அறிவிக்கப் பட்டுள்ளன.

அகோரர்கள் (பெண்களும் குழந்தைகளும் பார்க்கவேண்டாம் )



காசியில் நடக்கும் இதை பார்க்கும் யாருக்கும் காசி செல்லும் ஆசை இனி இருக்காது ................


பெண்களும் குழந்தைகளும் பார்க்கவேண்டாம்

Friday, September 26, 2008

இறந்தும் இதயம் வாழ்கிறது

திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் அசோகன்; இவரது மனைவி புஷ்பாஞ்சலி; இருவரும் டாக்டர்கள். திருக்கழுக்குன்றம் அடிவார வீதியில் கிளினிக் வைத்துள்ளனர். இவர்களின் மூத்த மகன் இதயேந்திரன்(15); செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தான். இளைய மகன் லஷ்மண்(11) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 20ம் தேதி மாலை, பெற்றோர் கிளினிக்கில் இருந்தனர். சகோதரர்கள் வீட்டில் இருந்தனர். இதயேந்திரன் குளிர்பானம் வாங்க வெளியில் செல்ல முடிவு செய்தான். மோட்டார் சைக்கிளில் செல்ல, கிளினிக்கிலிருந்த அம்மாவிடம் அனுமதி கேட்டான். அவர், அப்பாவிடம் கேட்டுவிட்டு, ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்லும்படி கூறினார். இதயேந்திரன், தந்தையிடம் கேட்காமல் மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றான்.

வீடு திரும்பும் வழியில், சாலையோரம் நின்றிருந்த மீன்பாடி வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. பலத்த காயமடைந்த இதயேந்திரன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். .

 பரிசோதித்த மருத்துவர்கள் கை விரித்தார்கள். ஹிதேந்திரனின் மூளை செயல் இழந்து விட்டது (பிரைன் டெத்). கிட்டத்தட்ட மரணம். இதயம் மட்டுமே துடிக்கும். பெற்றோரும் மருத்துவர்கள் ஆயிற்றே? பிரச்சினையை புரிந்துகொண்டார்கள். தன் மகனின் உடல் உறுப்புகளை தானமாக தர விரும்பினார்கள். கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகிய உறுப்புகள் அகற்றப்பட்டன. புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா நகரில் இருக்கும் செரியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனுக்கு இதயம் அவசரமாக தேவைப்பட்டது. ஹிதேந்திரனின் இதயம் அகற்றப்பட்டு 20 நிமிடங்களில் அந்த சிறுவனுக்கு பொருத்தப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் 20 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் அடைவது சாத்தியமா?

மருத்துவமனையின் நிர்வாகம் சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையை அணுகினார்கள். பிரச்சினையின் தீவிரத்தை புரிந்துகொண்ட கூடுதல் ஆணையாளர் சுனில் உடனடியாக ஒரு உதவி ஆணையாளரை அனுப்பி வைத்து உதவுமாறு உத்தரவிட்டார். உதவி கமிஷனர் மனோகரன் இந்த ஆபரேஷனுக்கு திட்டமிட்டார். தன் சக அதிகாரிகளோடு தொடர்புகொண்டவர் குறிப்பிட்ட அந்த நேரத்துக்கு போக்குவரத்து சிக்கல் இல்லாதவாறு திட்டம் தீட்டினார். சிக்னல்கள் முழுக்க போலிசாரின் கட்டுப்பாட்டுக்கு சில நிமிடங்களில் வந்தது. ஒரு ஆம்புலன்ஸில் இதயத்தை எடுத்துச் செல்லவும், அந்த ஆம்புலன்ஸுக்கு வழிவிட ஆக்சண்ட் காரில் ஏ.சி. மனோகரனே முன்செல்லவும் திட்டம் தீட்டப்பட்டது.


ஹிதேந்திரனின் இதயத்தை ஒரு பெட்டியில் வைத்து படபடப்போடு மருத்துவர்கள் ஓடிவந்தார்கள். படபடப்பில் இருந்ததால் ஆம்புலன்ஸில் ஏறுவதற்கு பதிலாக ஏ.சி.யின் காரில் ஏறிவிட்டார்கள். ஒரு நொடியை கூட வீணடிக்க விரும்பாத ஏ.சி. தனது டிரைவரான கான்ஸ்டபிள் மோகனை புயல்வேகத்தில் ஓட்ட சொன்னார். ஏ.சி.யின் கார் இலகுவாக செல்ல வழியெங்கும் போக்குவரத்து சீர் செய்யப்பட்டிருந்தது. போனில் போலிஸ்காரர்களிடம் பேசியபடியே வழியில் இருந்த தடங்கல்களையெல்லாம் அகற்றினார் ஏ.சி.



மேட்லி ரோடு, தி.நகர் புதிய மேம்பாலம், லயோலா, சூளைமேடு, அமைந்தகரை, அண்ணா வளைவு வழியாக சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மோகன் காரை விரட்டினார். திருப்பங்களில் கூட பிரேக்கில் மோகன் காலை வைக்கவில்லை. ஆக்ஸிலேட்டரில் வைத்த காலை எடுக்கவேயில்லை. பொதுவாக போக்குவரத்தில் இந்த தூரத்தை கடக்க சுமார் 50 நிமிடங்களில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை பிடிக்கும். மருத்துவர்கள் கொடுத்திருந்த டார்கெட் 20 நிமிடம். பத்தே நிமிடங்களில் செரியன் மருத்துவமனையை ஏ.சி.யின் கார் அடைந்திருந்தது. ஆறு மணி நேரம் நடந்த இருதய மாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்!



இனி ஹிதேந்திரனின் இதயம் வாழும்!!

மருத்துவத்துறை காவல்துறையோடு இணைந்து இந்த சாதனையை செய்திருக்கிறது. சென்னையில் மருத்துவத்துறை சாதனைகள் புரிவது ஒன்றும் அதிசயமல்ல என்றாலும், காவல்துறையின் இந்த அதிரடி சாதனை சென்னை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. வாய்ப்புகள் கிடைத்தால் எங்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு சல்யூட்.







































































































































.






















































.

Monday, September 22, 2008

ச்ச்சீய்ய்... போடா....




உன்னைக் கண்டு
எதையெதையோ மறைக்கிறேன்
காட்டிக்கொடுத்துவிடுகின்ற
இந்தக் கண்களை மட்டும்
மறைக்க முடியவில்லை..
போடா...

                                                                  எல்லோரும்
இருக்கும் போதும்
யாருக்கும் தெரியாமல்
ஆட்டம் போடும் உன்
கள்ள விரல்களை
என்ன செய்ய நான்..??
ஹையோ.. இப்பொழுதுதான்


கட்டினேன் ...
அதற்குள் இப்படிக்
கலைத்துவிட்டாயே
சேலையை..
என்றால் சரி கட்டிவிடுகிறேன்
என முழுதும் கலைக்கத்துடிக்கிறாய்
எப்படித்தான் உன்னை
வைத்துக்கொண்டு
சமாளிக்கப் போகிறேனோ...










என் கோபங்களையும்
வெட்கங்களையும்
கன்னா பின்னாவென
தின்றுதீர்க்கும் உன்
உதடுகளெனும்
முத்தசுரபிகளை
கொஞ்சம் சும்மா
இருக்கச்சொல்லேண்டா..
ப்ளீஸ்...




தூரத்தில் உன்னைக்
கண்டும்
காணாததுபோல் தான்
நடிக்கிறேன்
இந்தப் பாழாய்போன
கைகள்தான்
உன்னைப் பார்த்தாலே
உடைசரிசெய்யும் சாக்கில்
என்னைக் காட்டிக்
கொடுத்து விடுகின்றன..




உன் திட்டுகளையும்
தாங்க முடியவில்லை
உன் கொஞ்சல்களையும்
தாங்க முடியவில்லை
ஏணடா என்னை இப்படிக்
காதலித்துக் கொல்கிறாய்...?

நீ என்னவோ
முகம் முழுதும்
முத்தங்களை கொடுத்துவிட்டுப்
போய்விடுகிறாய்...
அதனால் வழக்கத்தைவிட
பொலிவாக இருக்கும்
என் முக ரகசியம் கேட்கும்
தோழியரிடம் சமாளிப்பதற்குள்
போதும் போதுமென்றாகிவிடுகிறது...


யார் யாரிடமெல்லாமோ
பேசுகிறேன்
சண்டையிடுகிறேன்
வாதம் செய்கிறேன்...
என கோபித்துக்கொள்கிறாயே
மடையா...
நான் உன்னை கண்டு
மட்டும்தான் வெட்கப்படுகிறேன்
தெரியுமா..?

கும்பலில் எல்லாம்
என்னிடம் ரகசியம்
சொல்லும் வேலை யெல்லாம்
வைத்துக்கொள்ளாதே...
நீ சொல்வதைக்
கேட்டுவிட்டு
என் வெட்கங்களை மறைக்க
நான் படும் பாடுகள்
உனக்கு என்னடா தெரியும்..?!

உன்னிடம்
கோபித்துக் கொண்டு
பேசாமல் இருந்தாலும்
என்னைப் பேசவைக்கும்
மந்திரத்தை
எங்கே இருந்து
கற்றுக்கொண்டன
உன் இதழ்கள்...?
ச்ச்சீய்...போடா..
பேசித்தொலைக்கிறேன்...

                                                   உன் உதடுகளையாவது
                                                  சமாளித்துவிடலாம்..
                                                 ஆனால்
                                                 அதன் மீதிருக்கும்
                                                      உன் மீசையின்
                                                              அட்டூழியங்களை
                                                                                      எப்படி சமாளிக்கப் போகிறேனோ...?


                                               இல்லாத நேரங்களில்
                                               உன் நினைவுகளால்
                                              கட்டிக்கொல்கிறாய்..
                                             இருக்கும் நேரங்களில்
                                             இறுகக் கட்டிக்கொள்கிறாய்...
                                             ஏணடா இப்படிப்
                                            படுத்தி எடுக்கிறாய்..?

நம்மை நாமே செதுக்கிக் கொள்ளல்-சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.



அந்த புத்தகத்தில் இருந்து .....



மனிதனின் வெளிப்பொறிகள் அமைந்துள்ள இந்த உடல் தூலவுடல் எனப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இதை ஸ்தூல சரீரம் என்பர். இதற்குப் பின்னால்தான் புலன், மனம், புத்தி, நான் - உணர்வு என்ற தொடர் அமைகிறது. இவையும், உயிர்ச் சக்திகளும் இணைந்த ஒன்றே நுண்ணுடல் அல்லது சூட்சும சரீரம். இந்தச் சச்திகள் மிக நுட்பமான அணுக்களால் ஆனவை. எத்தகைய தீங்கு ஏற்பட்டாலும் இந்த உடம்பு அழியாத அளவுக்கு அவை நுட்பமானவை. எந்த விதமான கேடும் அதிர்ச்சியும் சூட்சும உடலைப் பாதிப்பதில்லை.



நம் கண்ணுக்குப் புலனாவதான தூலவுடல் பருப்பொருளால் ஆனது. எனவே அது தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மாறுபடுகிறது. உட்கருவிகளான மனம், புத்தி, நான் - உணர்வு என்பவை மிக மிக நுட்பமான பொருளால் ஆனவை. எனவே பல யுகங்களானாலும் அவை அழியாமல் இருக்கும். வேறு எதுவுமே தடை சய்ய முடியாத அளவிற்கு நுட்பமானவை இவை. இவை எந்தத் தடைகளையும் கடந்துவிடும். இந்தத் தூலவுடல் அறிவற்றது, நுண்ணுடலும் அதுபோன்றது தான். ஆனால் இது சற்று நுட்பமான ஜடப்பொருளால் ஆக்கப்பட்டுள்ளது.


இந்த நுண்ணுடலின் ஒரு பகுதி மனம், ஒரு பகுதி புத்தி, ஒரு பகுதி நான் - உணர்வு. ஆனாலும் இவற்றில் எந்த ஒன்றும் `அறிபவன்' ஆக முடியாது. இவற்றுள் எதுவும் பார்ப்பவனாக, சாட்சியாக, யாருக்காக அறிவுச் செயல் நடக்கிறதோ அவனாக, நடக்கும் செயலைப் பார்ப்பவனாக ஆக முடியாது. மனத்திலும் புத்தியிலும் நான் - உணர்விலும் ஏறப்டும் இயக்கங்கள் எல்லாம் இவை அல்லாத வேறு யாருக்காகவோதான் இருக்க வேண்டும். இவை நுட்பமான ஜடப்பொருள் அணுக்களால் ஆனவை. ஆதலால் தன்னொளி உடையவையாக இருக்க முடியாது. இவற்றின் ஒளி இவற்றிற்குச் சொந்தமானதாக இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக இந்த மேஜையை எந்த ஜடப் பொருளும் உருவாக்கியிருக்க முடியாது. எனவே இவற்றிற்கெல்லாம் பின்னால் யாரோ ஒருவர் இருக்க வேண்டும், இவரே எல்லா தோற்றங்களுக்கும் உண்மைக் காரணமானவர். உண்மையாகவே எல்லாவற்றையும் அனுபவிப்பவர். இவரையே வடமொழியில் ஆத்மன் என்கிறார்கள். இவரே மனிதனின் உண்மை ஆன்மா.



உடல் ஒவ்வொரு நிமிடமும் அழிந்து கொண்டே இருக்கிறது. மனமோ தொடர்ந்து மாறியபடி இருக்கிறது. உடல் பலவற்றின் சேர்க்கை, மனமும் அத்தகையதே, எனவே இவை எல்லா மாறுதல்களுக்கும் அப்பாற்பட்ட நிலையை அடைய முடியாது. ஆனால் தூலப் பொருளான இந்த மெல்லிய உறையையும், இதற்கு அப்பாலுள்ள மனம் என்ற நுட்பமான உறையையும் தாண்டி இருக்கிறது ஆன்மா. இதுவே மனிதனது உண்மைத் தத்துவம். இது நிலையானது. என்றுமே பந்தப்படாதது. இதன் அழியாமை, சுதந்திரம் ஆகிய தன்மைகளே எண்ணம், ஜடப் பொருள் போன்ற போர்வைகளை ஊடுருவி, பெயர் உருவம் என்ற நிறங்களைக் கடந்து, சுதந்திரம் அழியாமை என்ற தன்மைகளை வற்புறுத்தி நிற்கிறது.



மிகவும் தடித்த அஞ்ஞானம் என்ற போர்வைகளையும் ஊடுருவி இந்த ஆன்மாவின் அழிவின்மையும், ஆனந்தமும், அமைதியும், தெய்வீகமும் பிரகாசித்து, நாம் இவற்றை உணரும்படிச் செய்கின்றன. ஆன்மாதான் உண்மை மனிதன். அவன் பயமும் அழிவும் பந்தமும் அற்றவன்.



வெளிச்சக்தி எதுவும் பாதிக்க முடியாத போது, எந்த மாறுதல்களையும் உண்டாக்க இயலாதபோதுதான் சுதந்திரம் என்பது இருக்க முடியும். எல்லா நியதிகளுக்கும், எல்லா எல்லைகளுக்கும், எல்லா விதிகளுக்கும், காரண காரியம் எல்லாவற்றிற்கும் அப்பால்தான் சுதந்திரம் என்பது இருக்க முடியும்.



எனவே எந்த வகை மாறுதலுக்கும் உட்படாததுதான் சுதந்திரமாகவும் அழிவற்றதாகவும் இருக்க முடியும். இருக்கின்ற இதுதான் அதாவது மனிதனது உண்மைத் தத்துவம்தான் ஆன்மா. இது மாறுதல் இல்லாதது, கட்டுப்பாடுகளுக்கு உட்படாதது. எனவே இதற்குப் பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை.



ஒவ்வொரு மனித ஆளுமையையும் ஒரு கண்ணாடிக் கோளத்திற்கு ஒப்பிடலாம். ஒவ்வொன்றின் நடுவிலும் இறைவனிடமிருந்து வெளிப்படும் தூய வெள்ளொளி இருக்கிறது. ஆனால் கண்ணாடிகள் பல நிறங்களிலும், பல கனங்களிலும் இருப்பதால் வெளிவரும் கதிர்கள் பல்வேறு தோற்றங்களைப் பெறுகின்றன. எல்லா நடு ஒளிகளும் ஒரே மாதிரியானவை, ஒரே அழகைக் கொண்டவை, வித்தியாசமாகத் தோன்றுவதற்குக் காரணம் அது வெளிப்படுகின்ற புறக் கருவிகளில் உள்ள குறைபாடுகளே. நாம் மேலே உயர உயர, அந்தக் கருவி மேலும் தெளிவாக ஒளி வீசும் தன்மையை அடைகிறது.

Friday, September 19, 2008

உலகில் தலைசிறந்த தேசிய கீதம் ஜன கண மன - யுனெஸ்கோ அறிவிப்பு

உலகில் தலைசிறந்த தேசிய கீதமாக ரவீந்திர நாத் தாகூர் எழுதிய ஜன கண மன - வை யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்து அறிவித்திருக்கிறது.


சர்வதேச இலக்கியம், கலை கலாச்சாரம் மற்றும் அறிவியலுக்கான அமைப்பான யுனெஸ்கோ, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய படைப்புகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிப்பது வழக்கம்.

இவ்வாண்டு கூடிய யுனெஸ்கோ, தன்னுடைய கலாச்சாரக் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய கீதமான, ரவீந்தரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன - வை உலகில் தலைசிறந்த தேசிய கீதமாக தேர்தெடுத்து அறிவித்துள்ளது.

இதனால் இந்தியர்கள் அனைவரும் தங்கள் காலரை தூக்கிக்காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

ஜன கண மன பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் பிடிக்கிறது.



ஜன கண மன அதிநாயக ஜெய ஹே

பாரத பாக்ய விதாதா.

பஞ்சாப சிந்து குஜராத மராத்தா

திராவிட உத்கல வங்கா.

விந்திய இமாசல யமுனா கங்கா

உச்சல ஜலதி தரங்கா.

தவ சுப நாமே ஜாகே,

தவ சுப ஆஷிஷ மாகே,

ஜாஹே தவ ஜெய காதா.

ஜன கண மங்கள தாயக ஜெயஹே

பாரத பாக்ய விதாதா.

ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,

ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.



உங்களுக்காக ஆங்கிலத்தில் ஜன கண மன



Jana Gana Mana Adhinayaka Jaya He

Bharat Bhagya Vidhata.

Punjab Sindh Gujarat Maratha

Dravida Utkala Banga.

Vindhya Himachal Yamuna Ganga

Ucchala Jaladhi Taranga.

Tubh Shubha Name Jage,

Tubh Shubha Ashisha Mange,

Gahe Tubh Jaya Gata.

Jan Gan Mangaldayak Jay He

Bharat Bhagya Vidhata.

Jaye He, Jaye He, Jaye He,

Jaye,Jaye,Jaye,Jaye He

Thursday, September 18, 2008

2009 இல் உலகம் அழியும் செவ்வாய் சிறுவன் சொல்கிறான் !!!!

போரிஸ் கிப்ரியானோவிச் – இந்த சிறுவன் ரஷ்யாவில் மிகப் பிரபலம். செவ்வாயில் ஒருகாலத்தில் வசித்ததாகச் சொல்லும் இச் சிறுவன் சொல்லும் கதைகள் வியப்பூட்டுகின்றன.

எல்லோரையும் போல இயல்பாகவே 1996ல் பிறந்த போரிஸின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அசுர மாற்றம் பெற்றோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிறந்த பதினைந்தாவது நாளே குப்புறப் படுத்து, நான்கு மாதத்தில் அப்பா என்று அழைக்கும் சிறுவனைக் கண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சியாய் இருக்காது ?

ஆறு மாதம் ஆகும்போதே வார்த்தைகள் உச்சரிக்கப் பழகிய் அவன், ஒன்றரை வயதான போது செய்தித் தாள் வாசித்தானாம் !

இரண்டு வயதில் குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். ஆனால் அவனுடைய நடவடிக்கைகளும், அறிவும் எல்லோரையும் வியப்பிலாழ்த்தியதுடன் பயத்தையும் கொடுத்திருக்கிறது.

திடீரென எங்கேயோ பார்த்து எதையோ வாசிப்பான், திடீரென அமர்ந்து செவ்வாய் கிரகம் குறித்து விளக்குவான், கேட்டால் நான் அங்கே தான் வாழ்ந்தேன் என்பான் – என்கிறார் போரீஸின் தாய்.

தனது மகன் சாதாரணமாய் இல்லையே எனும் கவலை அவனுடைய பெற்றோரின் உரையாடலில் எப்போதுமே வெளிப்படுகிறது.

தனது மூன்றாவது வயதில் கிரகங்களையும், விண்வெளியையும் குறித்துச் சொன்ன தகவல்களைச் சரிபார்த்து உண்மை என்று வியக்க பெற்றோருக்கு பல நூலகங்கள் அலைய வேண்டியிருந்திருக்கிறது. விண்வெளி குறித்து இவன் சொன்ன தகவல்கள் எல்லாம் உண்மை என்பதே பல சுவாரஸ்யமான கற்பனைகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

இவன் இப்படி அதிகப்பிரசங்கியாய் திரிகிறானே என்று ஆலயத்தில் திருமுழுக்கு கொடுத்திருக்கின்றனர். பையன் உடனே தெருவில் இறங்கி எல்லோரையும் பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்யவும், அழிவு வரப் போகிறது என எச்சரிக்கை செய்யவும் துவங்கினானாம்.

தான் செவ்வாய் கிரகத்தில் வசித்ததாகவும், செவ்வாயில் ஏற்பட்ட ஒரு அணு ஆயுதப் போரினால் செவ்வாய் மாபெரும் அழிவைச் சந்தித்தாதாகவும், இப்போதும் மக்கள் அங்கே தரையின் கீழே வசித்து வருவதாகவும் இவன் சொல்வது ஹாலிவுட் அறிவியல் படங்களை தூக்கிச் சாப்பிடுகிறது.

லெமூரியா காலத்தைக் குறித்து (7,00,000 ஆண்டுகளுக்கு முந்தையது) ஏதோ நேற்று நடந்ததைப் போல இவன் விளக்குவதையும், அதுகுறித்த படங்களைப் பார்த்து ஏதேனும் கருத்துக்களைச் சொல்வதும் என புல்லரிக்க வைக்கிறான் இந்தச் சிறுவன்.

லெமூரியர்கள் ஒன்பது மீட்டர் உயரம், லெமூரியாவின் அழிவிற்கு நான் கூட ஒருவகையில் காரணம் என அவன் சிலிர்க்க வைக்கிறான்.

இவனுடைய அதிமேதாவித் தனம் இவனை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. ஆசிரியர்கள் என்ன சொன்னாலும், அது தவறு என மேதாவித்தனமாக விளக்கிக் கொண்டிருப்பவனை எந்த பள்ளிக்கூடம் தான் ஏற்றுக் கொள்ளும். வேறு வழியின்றி இப்போது தனியாக படித்து வருகிறானாம்.

உலகில் ஏற்படப் போகும் பேரழிவைக் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அனுப்பப்படும் “இண்டிகோ” சிறுவன் இவன் என நம்புகின்றனர் பலர்.

இதை வலுப்படுத்துவது போல 2009 லும், 2013 லும் இரண்டு மாபெரும் அழிவுகளை உலகம் சந்திக்கும். தப்பிப் பிழைப்பவர்கள் வெகு சிலரே. துருவ விலகலால் இந்த சிக்கல் உருவாகும் என அவன் அதிர்ச்சிக் கதைகளை சொல்கிறான்.

உலகில் நிகழும் அழிவு நிகழ்வுகளின் போது அவனை மாபெரும் வலியும், பதட்டமும், நிம்மதியின்மையும் அலைக்கழிக்கும் என அவனது தாய் கண்கள் பனிக்க சொல்கிறார்.

மரணத்தைக் குறித்து பயப்படவேண்டாம் ஏனெனில் எல்லோருமே நிலை வாழ்வு வாழப்போகிறோம் என்கிறான் தத்துவ ஞானிபோல.

செவ்வாயில் நாங்கள் எல்லாம் கரியமில வாயுவைத் தான் சுவாசிப்போம், இங்கே தான் உயிர் வழியை சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இது தான் முதுமையைத் தருகிறது என ஒரு பளிச் சுவாரஸ்யத்தையும் சொல்கிறான்.

செவ்வாயிலிருந்து அடிக்கடி பூமிக்கு தான் வந்திருப்பதாகவும், விண்கலத்தை ஓட்டி வந்ததாகவும், லெமூரியா காலத்தில் தான் வந்த நிகழ்வுகளையும் மணிக்கணக்காய் பேசுகிறான். யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. இதெல்லாம் நானே நேரில் பார்த்தவை என்கிறான்.

பிரமிடுகளைக் குறித்து பேசும்போது, மக்கள் இப்போது நினைப்பது போல Cheops பிரமிடில் இருந்து பழங்கால வரலாறுகள் எதுவும் தெரிய வராது எனவும், அவையெல்லாம் இன்னோர் பிரமிடில் இருக்கிறது ஆனால் அந்த பிரமிட் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என அவன் திகைக்க வைக்கிறான்.

செவ்வாயை நெருங்கும் போது ஏன் விண்கலங்கள் எல்லாம் எரிந்து விடுகின்றன என விஞ்ஞானிகளில் தலையைப் பிய்க்கும் கேள்வியைக் கேட்டனர். அதற்கு அவன், இந்த விண்கலங்களில் உள்ள கதிர்களெல்லாம் அவர்களைப் பாதிக்கும் என்பதால் அவர்கள் வேறு கதிர்களும், சமிச்ஞைகளும் அனுப்பி அவற்றை அழிக்கின்றனர் என்கிறான்.

விண்வெளிக்கலம் எப்படிப்பட்டது, எப்படிச் செய்யப்பட்டது என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிறான் இவன்.

உதாரணமாக,

விண்கலம் ஆறு அடுக்குகளைக் கொண்டது. மேல் பாகம் இருபத்து ஐந்து விழுக்காடு உறுதியான உலோகத்தால் ஆனது. இரண்டாவது அடுக்கு முப்பது விழுக்காடு ரப்பரால் ஆனது. மூன்றாவது அடுக்கு முப்பது விழுக்காடு உலோகத்தாலும், கடைசி அடுக்கு காந்தப் பொருட்களாலும் ஆனது. இந்தக் காந்தத்தில் விசையைச் செலுத்தினால் இந்த விண்கலம் பிரபஞ்சத்தில் எங்கே வேண்டுமானாலும் செல்லும் என்கிறான்.

இவனுடைய அலட்சியமான உறுதியான விளக்கத்தைப் பார்த்து விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் இவன் பேசுவதெல்லாம் பல ஆண்டுகாலம் விண்வெளி ஆராய்சியில் ஊறித் திளைத்தவர்கள் பேசும் நுட்ப மொழியில் !

ஏன் மக்கள் நோயாளியாகிறார்கள் என்ற கேள்விக்கு மக்கள் சரியான வாழ்க்கை முறை வாழாதது தான் காரணம். யாரேனும் உன்னை காயப்படுத்தினால் அவனை அரவணைத்து, மன்னித்து அவன் முன்னால் முழங்கால் படியிட வேண்டும். யாரேனும் நம்மை வெறுத்தால் நம்மை மன்னிக்கச் சொல்லி விண்ணப்பிக்க வேண்டும். என சாத்வீக ஆன்மீகவாதியாகிறான்.

இவன் சொல்வதில் எதை நம்புவது, எதை விடுப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருக்கின்றனர் பல நிலைகளிலுமுள்ள மக்கள்

சிறுவனின் புகைப்படம் பார்த்து இதை நம்ப வேண்டும் என்றால் .இந்த தளத்திற்கு செல்லவும்

http://english.pravda.ru/science/mysteries/104375-0/

Wednesday, September 17, 2008

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...

மக்களே நானும் பொறுமையா இருக்கனும்னு தான் பாக்கறேன்... ஆனா நம்மல விட மாட்டானுங்க போலிருக்கு...


1:

U looking Mallika Sheravath

i looking Imran aasmi

Come let us murder the world

(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட... அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)

2.

hey annikku Ravi yoda b'day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???

Hi..
(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)

3.

Hi!

if u retain this scrap I will understand that you are interested in meand
if u delete this scrap, it means you are dreaming about me.
Now u decide wat to do

(இவரு புத்திசாலியாம்... அப்படியே மடக்கிட்டாராம்)

4.

hi,the numerical value of L+O+V+E=54
but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 108
54+54= 108
LOVE+LOVE= FRIENDSHIP

so friendship is two times greater than love.............

 will u be my friend ?

(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ)

5.

heyyy gal,Barcelona hav won the champions league finals!

hurraaaayyyy!!!! come on lets be friends....

(டேய் முடிவா நீ என்னடா சொல்ல வர?)

6.
generally i never scrap to unknown ones but this pic just caught my eye...

awesome pic gal.

kalakita po.. lol


(இவரு நல்லவராம்.... ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்...

மொன்ன நாயி...இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு)

7.

hi niki.. well can i expect a scrap back from ya..

well thought u are a person who can read and write... is it true.,... ?

(டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க எப்படிடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவாங்க)

8.

If u add me in ur list ill make ur life more pleasant and colorful...watsay?

scrap me bak if u wannna be ma friend!

(ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்)

9.Scrap- Eyy black beauty,how are you so fair???

If you don't add me its very unfair...

(இவருக்கு கவிதை வேற...)

10.

Nice face, sexy smile, beautiful Eyes, Lustful Lips....Overall stunning effect...

But Miss Do i know you??? Dont embarass me by saying-u dont know me..

ya i know u dont know me.. but who bothers??

come on-add me as friend..

am waiting 2 b ur fan...

11.

nee alaga iruukanu nenikala anna

ahtuellaam nadathrumu payama irkku

hi how r u?

just fun crazy introdution.

HOW IS IT.

மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?!  இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!

12.

had to tell you this....you just remind of somebody, whom i thought i should forget.....but still i felt happy lookin at your face. If you understand tamil....


Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?

நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்.

13.

hi

This is Karthik from chennai adayar workng in sutherland.

If u like my pic just scrap me. lets hav a nice time

add me in yahoo messenger.

guy22foru@yahoo.com

i come with cam from 8.30 to 9.30am daily.

lets hav a nice time

scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga



8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்...

14.
hello shaline tell me about ur climate there

கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?

15.

hai, i've not yet put a scrap tu u.

first one



இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ...



16.

can i have this kutti pisasu as my friend???????????????????????????

தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?



17.Hi Dear friend,

This is Raghu from chennai working as a Soft eng.

i like to have friendship with u.

my mail id : raghu0107@gmail.com

i am expecting ur reply

take care

- Raghu



டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??

எடுக்கறது பிச்சை... இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?



18.

hi vaisu,

how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.

reply as soon as

takecare

bye



இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?

19.

r u BCCCCCCCCCCCCCCCCCCCC

ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?

20.

ur name s nice mrs.mosquito bite crazzyyyy.....

ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???



(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா......)



மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா..

Tuesday, September 16, 2008

மறுபடி உன் நினைவுகள்...........

நீ முகம் திருப்பி நடந்த போதே

நான் முடிவெடுத்தேன்

மற்ந்து விடுவதென

கைபேசியில் உன் சிணுங்கல்கள்

காதலர் தின வாழ்த்து அட்டைகள்

கடிதத்தில் கவிதைகள்

நீ தெரிந்தெடுத்த சட்டைகள்

சின்ன சின்ன பரிசுகள்

எல்லாம் சுருட்டி கடலில் வீசிவிட்டேன்

திரும்பி நடந்த போது

சிரித்த படி எதிரே

கடலை விற்கும் கடற்கரை பையன்

" அக்கா வரலீங்களா சார் "

சே !... மறுபடி உன் நினைவுகள்...........

பீகார் வெள்ள சேத நிவாரணத்திற்கு ஒரு நிமிடத்தை செலவழித்தால்....

பீகார் வெள்ள சேதத்தை பற்றி தெரிந்திருக்கும். வெள்ள சேத நிவாரணத்திற்கு நீங்களும் உதவலாம். உங்களின் பொன்னான ஒரு நிமிடத்தை செலவழித்தால் போதும்.

இந்த தளத்திற்கு செல்லவும். http://www.helpbihar.in

நாலே கேள்விகள். சரியான பதிலுக்கு கொடுத்தால், உங்கள் சார்பாக உதவிகள் செய்யப்படும்.

உங்களுக்கே பதில் தெரியும். இருந்தாலும் இந்தாங்க பிட்.

1. Capital of bihar : Patna

2. The river caused flood : Kosi

3. Total people affected : 25lakhs

4. What is the opposite of word "flood" : Drought

எவ்வளவோ பண்றோம்.... இத பண்ண மாட்டோமா...

கடவுளின் துகள் - ஹக்கர்களின் அட்டாக்!!!

சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டைல் 18 மைல் சுற்றளவான கடவுளின் துகளை காணும் பரிசோதனைக்காரரின் உத்தியோகபுர்வ இணையத்தளம் 2600 of the Greek Security Team எனும் ஹேக்கர் குழுவால் புதன்கிழமை ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. உலகத்தை காப்பாற்றும் பொருட்டு இந்த ஹேக்கிங் நடத்தப்பட்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்
LHC பரிசோதனைக்கான கணனி வலைப்பின்னல் மிகமிக சிக்கல் வாய்ந்த ஒரு கட்டமைப்பாகும். தகவல்களை மீவேகத்தில் பதிவுசெய்யவும் அதி விரைவான அனலைஸ் வேலைகளுக்குமெக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட கணனிகளிக் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக இதில் உள்ள கணனி பிரிவு MIT நிபுணர் Frank Taylor தெரிவித்திருக்கிறார்.




CMS ( Content Management System ) ல் செய்யப்பட்ட வெப்சைட்டை ஹேக் பண்ணுவதில் எந்த பிரச்சகையுமில்லை. இது மிக இலகுவானது. இதில ஆச்சரியப்பட ஒன்றுமில்லையேன இதன் கணனி பாதுகாப்பு பிரிவிகர் [the computer security team] கூலாக கூறியிருப்பதுதான் ஆச்சரியம்.



ஆனாலும் ஹேக்கர்கள் பிரதான கட்டளைக்கணணியை அணுகுமுன்பாக தடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் மிக அரிய விடயங்களும் பணமும் காக்கப்பட்டிருக்கிறது.



ம்ம்ம் மொத்தத்தில் நாம எதயாவது ரகசியமா பண்ணணும்னா அத இணைத்தில் பகிராமலிருப்பதுதான் புத்திசாலித்தனமான செயல் !!! ( சொல்லியதும் அவர்கள்தான் )



மேலும் தகவல்களுக்கு



http://blog.wired.com/wiredscience/2008/09/hackers-infiltr.html



சில விஞ்ஞானிகள் இந்த பரிசோதனையினால் Black Hole உருவாகலாமென எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு வேலை செய்யும் பௌதிகவியலாளர்கள் இதற்கு வாய்ப்பில்லையெக மறுத்திருக்கிறார்கள்.



ஆனால் இவ்வளவு பெரிய ஆராய்ச்சிக்கு இவ்வளவு செலவு பண்ணி எந்த பிரச்சனையும் வராது என அடித்துச்சொல்லி கொஞச நாளிலேயே இப்படி மெயின் கணினியையே ஹேக் செய்யும் அளவில. இருக்குமானால் இவர்களின் உத்தரவாத்ததை இனி யார் நம்பப்போகிறார்கள் ????

உமாவுக்கு.......

எந்தக் கோவிலுக்குப் போனாலும் என் நட்சத்திரம் உனக்குத் தெரிகிறது. எத்தனை முறை சொல்லியிருப்பினும் உன் நட்சத்திரம் என் ஞாபகத்தில் நிற்பதில்லை.




என் ஒவ்வொரு பிறந்தநாளின் அதிகாலையும் உன் முத்தத்தோடு விடிகிறது எனக்கு. உன் பிறந்தநாளன்று இரவு உணவின் போது ‘இன்னைக்கு என்ன நாள்ன்னு சொல்லுங்க’ என்பதை உன் வழக்கமாய் நான் ஆக்கி வைத்திருக்கிறேன்.


எத்தனையோ நாட்கள் என் உடல் நலனுக்காக விழித்திருக்கிறாய். அன்றொரு நாள் உனக்காக ஓரிரு மணிநேரம் விழித்ததையே இன்னும் சொல்லிக்காட்டிக் கொண்டிருக்கிறேன் நான்.


எனக்குப் பிடித்த நிறம் ஆரஞ்சு என்று உனக்குத் தெரியும். உனக்குப் பிடித்த நிறமும் ஆரஞ்சு என்பது அது எனக்குப் பிடித்ததால்தான் என்பது எனக்குத் தெரியாது.


என் நண்பர்களை நீ வரவேற்று மரியாதையாக நடத்த வேண்டுமென்று எதிர்பார்ப்பேன். உன் நண்பிகளின் பெயர் கூடத் தெரியாதெனக்கு!

அலுவலகத்திலிருந்து வந்து முகம் கழுவி முடிக்குமுன் எனக்காக கணினியைத் திறப்பாய் நீ. உனக்காய் ஒருபோதும் கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்ததில்லை நான்.


இருவருமே பணிபுரிந்தாலும் அடுக்களையை உனக்கானதாய் உவமானம் காட்டும் கீழாந்தரமானவனாய்த்தான் நானிருக்கிறேன்!


என்னைவிடக் களைத்து வரும்போதும் உனக்காய் ஒரு புன்னகையைக் கூட கொடுக்கத் தெரியாத எனக்கு, நான் ஊர் சுற்றி விட்டு வரும் போது கூட தேநீர் தயாராய் இருக்கும்.


நான் தனியாக இருக்கும்போது, தொலைக்காட்சியில் செய்தியோ, கிரிக்கெட்டோ ஓடும். நீயும் நானும் இருக்கும்போதும் செய்தியோ, கிரிக்கெட்டோதான் ஒடும். உன் ரசனை குறித்த கவலைகள் எனக்கிருந்ததில்லை.


என் ச்சின்னச் சின்ன துண்டுக் காகிதம் கூட இருக்குமிடம் உனக்குத் தெரியும். .

எப்போதுமே காய்கறி லிஸ்டில் பாவக்காய் இருந்ததில்லை. எனக்கு பாவக்காய் பிடிக்கும் என்பதற்காக நம் வீட்டு லிஸ்டில் இப்போது பாவக்காய் வருகிறது ...

எங்கேயாவது புறப்படும்போதும் என்னால் ஒரு மணிநேரம் தாமதமானால்கூட நீ கோவப்படக்கூடாது. உன்னால் ஒரு பத்து நிமிடம் பயணம் தள்ளிப் போனால் அந்தப் பயணத்தையே ரத்து செய்துவிடும் மூர்க்கனாய் மாறுகிறேன் நான்.


பீரோவில் என் ஆடைகள் அழகாய் அடுக்கிவைக்கப்பட்ட இடம் போகத்தான் உன் ஆடைகளுக்கு அனுமதி அளிக்கிறாய்.


 பொரியல் வைக்கும்போது மட்டும்  மிளகாயைப் போடுவதில் உன் அன்பை நான் உணர்ந்திருக்கிறேன்.

( அவ்வளவு காரம் )


என்னோடு அமர்ந்து கவிதைகளை நீ ரசித்த அளவுக்கு, உன்னோடு அமர்ந்து உன் விருப்பத்தைச் சொல் எனக் கேட்டதில்லை நான்.



ஒவ்வொரு முறை இப்படியெல்லாம் நெகிழ்வாய் உன்னைப் பற்றி நினைப்பதெல்லாம் ஒரே நாளோடு முடிந்துவிடுகிறது. உனக்கு மட்டும்தான் எப்போதுமே ஒரேமாதிரியாய் இருக்க முடிகிறது.



உமா....





ஒரு நாளாவது நீ நானாகவும்... நான் நீயாகவும் மாறவேண்டுமெனக்கு...


அப்போதுதான் உன் வலிகள் எனக்கும் தெரியும்!


என் மனைவியாய் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்



ஜெய்

Friday, September 12, 2008

கவிதை

உன் கண்கள் என்ன
கம்யூனிஸ்ட்டா ?
உனக்காக
என் இதயம்
போராடுகிறது.........

எழுதி போராடுவது ஜெய்

காதலிப்பது எப்படி?

சரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு திகைச்சு இருக்கும் என் சக காளையர்களுக்கும், தோழிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பனம். படிச்சு தெரிஞ்சுகோங்க.



பசங்களுக்கு:

முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு!

இரெண்டாவது,

அந்த பொண்ணு மேல காதல் வரணும்.

இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும்.

மூன்றாவது,

அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.

நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.

நான்காவது,

அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.

கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.

ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..

Pls go to step one.

சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)

-------------------------------------

பெண்களுக்கு:

பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.


முயற்சித்து பாருங்கள்

இதை தான் (முயற்சி உடையர் இகழ்ச்சி அடையார் ) என்று சொல்லி இருக்கிறார்கள் so
முயற்சி செய்யவில்லை என்றால் அதற்கு ஜெய் பொறுப்பல்ல ..........

Woman== Problem




இதை சமாளிக்க வேண்டுமா ?

குடிமகன் கண்ணில் சுண்ணாம்பு தடவும் கலைஞர்



இலவச டிவி, இலவச நிலம் , ஒருருபா அரிசினு எல்லாம் இலவசமா குடிமக்களுக்கு கொடுக்கிற கலைஞர் .. டாஸ்மார்க்ல குடிமகன்களுக்கும் எதாவது தள்ளுபடி பண்ணலாம்ல ...
அட ஒரு குவாட்டருக்கு ஒரு பாக்கெட் தண்ணியாவது இலவசமா கொடுக்கலாம்ல ...

ஒரு கண்ணுல வெண்ணையும் ஒரு கண்ணுல சுண்ணாம்புல வைக்கிறாரு ....

வர எலக்சன்ல வாட்டர் பாக்கெட் கொடுக்கிறவங்களுக்குதான் நம்ம ஒட்டு .......

இந்தியக்கொடி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சில

நமது இந்தியாவின் தேசியக்கொடி குறித்த சில தகவல்கள் :

நமது இன்றைய மூவர்ணக்கொடி ஒரே நாளில் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல . அது பல மாற்றங்களுக்கு பிறகு பலரது உழைப்பால் இன்றைய நாளில் நாம் உபயோகிக்கும் மூவர்ணக்கொடியாக உருப்பெற்றது .


முதல் மூவர்ணக்கொடி :








இந்தியாவின் சுதந்திர போர் இருபதாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் தொடங்கிய வேளையில் , அதுவரை பிரிட்டிஷ் அரசாங்கத்தினை சார்ந்த தேசியக் கொடியை மட்டுமே பயன்படுத்தி வந்த இந்தியர்கள் தமக்கென ஒரு கொடியையும் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு கொடியாக இருக்க வேண்டும் என கருதி 1906ஆம் ஆண்டில் வங்காளத்தில் சுசிந்தர பிரசாத் போஸ் என்பவரால் வங்காளத்தை இந்தியாவில் இருந்து பிரிப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட ஒரு போராட்டத்தில் , இந்தியாவில் முதன்முதலாக மூவர்ணக்கொடி இடம் பெற்றதாக வரலாற்றுச்சான்றுகள் கூறுகின்றன . நடுவில் மட்டும் சீக்கியர்களுக்காக மஞ்சள் நிறம் சேர்க்கப்பட்டது.

இம்மூவர்ணக்கொடியில் , காவியில் நீள்வாக்காக 8 நட்ச்சத்திரங்களும் , மஞ்சளில் வங்காள மொழியில் வந்தே மாதரமும் , பச்சையில் ஒரு சூரியன்,சந்திரன் அதன் மீது ஒரு நட்சத்திரத்தோடு அமைந்தது .


முதலாம் உலகப்போரில் நமது கொடி :







1907ல் முதலாம் உலகப்போரின் ஆரம்ப காலத்தில் , பிக்காய்ஜி காமா என்பவர் , ஜெர்மனியில் இந்தியாவின் மூவர்ணக்கொடியில் சில மாற்றங்களோடு அங்கே வெளியிடப்பட்ட இக்கொடி , முதலாம் உலகப்போருக்குப்பின் பெர்லின் கமிட்டி கொடி என அழைக்கப்பட்டது .




இக்கொடியில் இஸ்லாத்தை காட்டுவதாக பச்சைநிறம் முதலாவதாகவும் அதில் அப்போது இந்தியாவில் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில் எட்டு தாமரைகளும் இந்து மதத்தை வலியுருத்தும் காவி நிறம் கடைசியிலும் அதில் வலதுபுறம் சூரியன் மற்றும் இடதுபுறம் சந்திரனும் இடம்பெற்றிருந்தது , நடுவில் வெள்ளைநிறத்தினூடே வந்தேமாதரம் தேவநாகரியில் எழுதப்பட்டிருந்தது . இக்கொடி முதலாம் உலகப்போரில் மெசபட்டொமியாவில் நடந்த போரில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .




1917 ல் மாற்றம் :





1917 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுயாட்சி வேண்டி அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதர திலகரும் ஒரு புதிய கொடியை உருவாக்கினர் . ஆனால் இக்கொடி அவ்வளவாக மக்களை சென்றடையவில்லை.




காந்தியின் வருகை :







மகாத்மா காந்தி அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் கொடியின் பல மாற்றங்களை கொண்டு வந்தார் , 1921 ஆம் ஆண்டு ஒரு புதிய வடிவில் கொடி உருவாக்கப்பட்டது . அக்கொடியில் இந்தியாவின் சிறுபான்மையினரின் மத அடிப்படையில் வெள்ளை(கிறித்துவம்),பச்சை(இஸ்லாம்),காவி(இந்து) என வரிசையாகவும் நடுவில் ராட்டையும் இடம் பெற்றது , அது அப்போதைய ஐயர்லாந்து நாட்டின் கொடியை ஒத்ததாக இருந்தது . இது பல அரசியல் காரணங்களால் இந்திய காங்கிரஸ் மற்றும் பெருவாரியான சுதந்திர போராட்டங்களிலும் உபயோகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





மதம் சார்ந்த ஒற்றை நிற இந்தியக்கொடி :




இதனை அடுத்து ஆரஞ்சு (ஆக்கர்) நிறத்தில் இடது மூலை உச்சியில் ராட்டையுடன் ஒரு கொடி உருவாக்கப்பட்டது , அதுவும் இந்திய தேசிய காங்கிரஸால் நிராகரிக்கப்பட்டது.


ராட்டையுடன் இந்திய தேசிய காங்கிரஸின் கொடி 1931 :









1931 ல் காந்தியால் உருவாக்கப்பட்ட இக்கொடி இன்றைய நமது தேசிய கொடியோடு ஒத்து இருந்தது , நடுவில் அசோக சக்கரத்திற்கு பதிலாக ஒரு ராட்டை இடம் பெற்றது , இது அக்காலகட்டத்தில் அனைவாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களால் பல சுதந்திர போராட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டது .



இந்தியாவின் இன்றைய தேசியக்கொடி :








1947 ஆகஸ்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் திரு.ராஜேந்திர பிரசாத் , திரு.அப்துல்கலாம் ஆசாத், திரு.ராஜாஜி, திருமதி.சரோஜினி நாயுடு , ஆகியோரது தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கான தேசிய கொடியை வடிவமைக்க முடிவானது , அவர்கள் அப்போதைய இந்திய தேசிய காங்கிரசின் கொடியை சில மாற்றங்களோடு எடுத்துக்கொள்ள முடிவானது . அக்கொடி ஆகஸ்ட் 14 ஆம் தேதி முடிவாகி , ஆகஸ்ட் 15 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர நாளன்று மக்களுக்கு அற்பணிக்கப்பட்டது .




அதுவே இன்று வரை நமது தேசியக்கொடியாக பட்டொளி வீசி பறக்கிறது.


__________________________________________________________________


* ஒரு ஆண்டில் இந்தியாவில் நமது கொடி விற்கப்படும் கொடிகளின் எண்ணிக்கை 40 மில்லியன் .


___________________________________________________________________


* இந்தியகொடியை உடையாக அணிவது தடை செய்யப்பட்டிருந்தாலும் , அது பிற்காலத்தில் கால்சட்டை மற்றும் உள்ளாடைகளாக பயன்படுத்த மட்டுமே தடை என்ற அளவுக்கு குறைக்கப்பட்டது . மேல்சட்டையாக அணிய அனுமதி உண்டு.


__________________________________________________________________


*எவரெஸ்ட் சிகரத்தில் , முதன்முதலாக மே மாதம் 29 ஆம் தேதி 1953 ஆம் ஆண்டு நேபாள கொடியுடன் நடப்பட்டது.
___________________________________________________________________


*1971ல் இந்திய கொடி அப்பல்லோ 15 செயற்கைக்கோளில் அதில் சென்ற விண்வெளி வீரர் கமாண்டர் ராகேஷ் சர்மா அணிந்திருந்த சட்டையில் மெடலாக பயணித்தது .


___________________________________________________________________


*இந்தியாவிலேயே உயரமான கொடியேற்றம் ( 138 feet ) சென்னை கோட்டையில் உள்ளது


___________________________________________________________________


பாகிஸ்தான் ரூபாய் நோட்டில் , இந்தியா பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இணைந்த ஒரு அரிய புகைப்படம்

Thursday, September 11, 2008

சர்தார்ஜி ஜோக்

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...

=============================================================================

சர்தார்ஜியும் அவரது காதலியும்...

காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..

சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!

=============================================================================

மேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க ?

சர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..

மேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட் ?

சர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...

=============================================================================

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...

சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது

சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...

***************************************************

இண்டர்வியூவில்...

தேர்வாளர் : ஒரு எலக்ட்ரிக் மோட்டார் எப்படி இயங்கும்...சொல்லுங்கள்...

சர்தார்ஜி : ட்ட்ட்ருருருருருருருருர்ரூரூரூரூ

தேர்வாளர் : யோவ் நிறுத்துய்யா நிறுத்துய்யா

சர்தார்ஜி : ரூரூரூருரு ட்ட்டு டுடு டுடு டுடு.

Wednesday, September 10, 2008

பணக்கார இந்தியா

இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.64 லட்சம் கோடி ஸ்விஸ் வங்கியில்
நாம் அனைவரும் நிணைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இந்தியா ஏழை நாடு அல்ல. ஆமாம். 100 சதவிகித 'அக்மார்க' உண்மை நம்ப முடியவில்லையா?..தொடர்ந்து படியுங்கள்.

இந்திய மக்களிடமிருந்து ஊழல், கமிஷன் மற்றும் லஞ்சம் மூலம்- கொள்ளையடித்து, கணக்கு காட்டாமல் சுவீஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் கறுப்பு பணம் எவ்வளவு தெரியுமா? ரூ.64 லட்சம் கோடி (1456 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அதிர்ச்சி தகவலை சுவிட்சர்லாந்து வங்கிகளின் கூட்டமைப்பு (Swiss Banking Association) தனது ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்த தொகை உலக வங்கி (World Bank), உலக நிதி நிறுவனம் (Internationala Monetary Fund), மற்றும் வளர்ந்த நாடுகளிடமிருந்து இந்தியா தனது வளர்ச்சி திட்டங்களுக்கக வாங்கியிருக்கும் வெளிநாட்டு கடனின் மொத்த மதிப்பைவிட 13 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப் பணத்தையெல்லாம் பதுக்கி வைத்திருக்கும் ‘யோக்கிய சிகாமனிகள்' யார் தெரியுமா?
நமது இந்தியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட அய்.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மற்றும் அர்சியல் வாதிகள்தான்.

உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் இந்திய வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 2020 ஆண்டு, இந்தியா வல்லரசாகவேண்டும் என்று கனவு காணச்சொல்லியிருக்கிறார். ஆனால், தற்பொழுது வெளியாகியுள்ள இந்த விஷயம், ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத இந்தியாவின் வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும் என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கிறது,
சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு தங்கம் பெற்ற இந்தியா, ஸ்விஸ் வங்கியில் 'கள்ள' கணக்கு வைத்திருக்கும் முதல் ஐந்து நாடுகளில் - முதலிடத்தை தட்டி செல்கிறது.

1. இந்தியா---- $1,456 billion

2. ரஷ்யா---$ 470 billion

3. UK -------$390 billion

4. உக்ரைன் - $100 billion

5. சீனா -----$ 96 billion

அது மட்டுமல்ல, இந்தியாவின் வைப்புத்தொகை ($1456 பில்லியன்) - மற்ற நான்கு நாடுகளின் மொத்த வைப்புத்தொகையை ($1056 பில்லியன்) விட அதிகம்.
இந்த பணத்தை இந்திய மக்களுக்கு பிரித்துக்கொடுத்தால், 45 கோடி பேருக்கு - ஒவ்வொருவருக்கும் 1,00,000 ரூபாய் கிடைக்குமாம்..

இந்திய மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை, இந்தியா சட்ட \ரீதியாக நடவடிகையெடுத்து மீண்டும் $1456 பில்லியன் பணமும் திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிட்டால் ஒரே நாளில் நமது வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு, மீதியிருக்கும் பணத்தை Fixed Deposite -ல் போட்டால், அதிலிருந்து வரும் வட்டி - இந்திய அரசின வருடாந்திர 'பட்ஜெட்' க்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக கிடைக்குமாம். அதனால், துண்டு விழாத பட்ஜெட் போடலாம், புதிய வரிகள் போடுவதை தவிர்க்கலாம்,

வறுமைகோட்டுக்கு கீழே உள்ள இந்தியர்களை அப்படியே 'அலாக்'காக துக்கி (வறுமை) கோட்டுக்கு மேலே வைத்து 'கோட்டும்- சூட்டும்' போட்டு பார்க்கலாம்.

முத்தம் , சில்லென்று சில குறிப்புகள் :

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது

*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .

*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான். *நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .

*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .

*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.

*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.

*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .

*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.

*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .

*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது.

*ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.

*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.

*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.

*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.

*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை

*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .

*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது

* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது.

காதலை சொல்ல 100 வழிகள் (உங்களுக்கும் தேவைப்படும் )

English - I love you

Afrikaans - Ek het jou lief

Albanian - Te dua

Arabic - Ana behibak (to male)

Arabic - Ana behibek (to female)

Armenian - Yes kez sirumem

Bambara - M'bi fe

Bengali - Ami tomake bhalobashi (pronounced: Amee toe-ma-kee bhalo-bashee)

Belarusian - Ya tabe kahayu

Bisaya - Nahigugma ako kanimo

Bulgarian - Obicham te

Cambodian - Soro lahn nhee ah

Cantonese Chinese - Ngo oiy ney a

Catalan - T'estimo

Cherokee - Tsi ge yu i

Cheyenne - Ne mohotatse

Chichewa - Ndimakukonda

Corsican - Ti tengu caru (to male)

Creol - Mi aime jou

Croatian - Volim te

Czech - Miluji te

Danish - Jeg Elsker Dig

Dutch - Ik hou van jou

Elvish - Amin mela lle (from The Lord of The Rings, by J.R.R. Tolkien)

Esperanto - Mi amas vin

Estonian - Ma armastan sind

Ethiopian - Afgreki'

Faroese - Eg elski teg

Farsi - Doset daram

Filipino - Mahal kita

Finnish - Mina rakastan sinua

French - Je t'aime, Je t'adore

Frisian - Ik h�ld fan dy

Gaelic - Ta gra agam ort

Georgian - Mikvarhar

German - Ich liebe dich

Greek - S'agapo

Gujarati - Hoo thunay prem karoo choo

Hiligaynon - Palangga ko ikaw

Hawaiian - Aloha Au Ia`oe

Hebrew

Hebrew to male: "ani ohev otcha" (said by male) "Ohevet ot'cha" (said by female)

Hebrew to female: "ani ohev otach" (said by male) "ohevet Otach" (said by female)

Hiligaynon - Guina higugma ko ikaw

Hindi - Hum Tumhe Pyar Karte hae

Hmong - Kuv hlub koj

Hopi - Nu' umi unangwa'ta

Hungarian - Szeretlek

Icelandic - Eg elska tig

Ilonggo - Palangga ko ikaw

Indonesian - Saya cinta padamu

Inuit - Negligevapse

Irish - Taim i' ngra leat

Italian - Ti amo

Japanese - Aishiteru or anata ga daisuki desu

Kannada - Naanu ninna preetisuttene

Kapampangan - Kaluguran daka

Kiswahili - Nakupenda

Konkani - Tu magel moga cho

Korean - Sarang Heyo or Nanun tangshinul sarang hamnida

Latin - Te amo

Latvian - Es tevi miilu

Lebanese - Bahibak

Lithuanian - Tave myliu

Luxembourgeois - Ech hun dech g�er

Macedonian - Te Sakam

Malay - Saya cintakan mu / Aku cinta padamu

Malayalam - Njan Ninne Premikunnu

Maltese - Inhobbok

Mandarin Chinese - Wo ai ni

Marathi - Me tula prem karto

Mohawk - Kanbhik

Moroccan - Ana moajaba bik

Nahuatl - Ni mits neki

Navaho - Ayor anosh'ni

Norwegian - Jeg Elsker Deg

Pandacan - Syota na kita!!

Pangasinan - Inaru Taka

Papiamento - Mi ta stimabo

Persian - Doo-set daaram

Pig Latin - Iay ovlay ouyay

Polish - Kocham Ciebie

Portuguese - Eu te amo

Romanian - Te iubesc Awexu

Russian - Ya tebya liubliu

Scot Gaelic - Tha gra\dh agam ort

Serbian - Volim te

Setswana - Ke a go rata

Sign Language - ,\,,/ (represents position of fingers when signing'I Love You')

Sindhi - Maa tokhe pyar kendo ahyan

Sioux - Techihhila

Slovak - Lu`bim ta

Slovenian - Ljubim te

Spanish - Te quiero / Te amo

Swahili - Ninapenda wewe

Swedish - Jag alskar dig

Swiss-German - Ich lieb Di

Surinam - Mi lobi joe

Tagalog - Mahal kita

Taiwanese - Wa ga ei li

Tahitian - Ua Here Vau Ia Oe

Tamil - Nan unnai kathalikuraen

Telugu - Nenu ninnu premistunnanu

Thai - Chan rak khun (to male)

Thai - Phom rak khun (to female)

Thai (informal) Rak te

Turkish - Seni Seviyorum

Ukrainian - Ya tebe kahayu

Urdu - MUJHE TUM SE MUHABAT HAIN / MUJHE TUMSE ISHK HAI....

Vietnamese - Anh ye^u em (to female)

Vietnamese - Em ye^u anh (to male)

Welsh - 'Rwy'n dy garu di

Yiddish - Ikh hob dikh

Yoruba - Mo ni fe

இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிக கறுப்புப் பணம்!

சென்னை: இந்தியா ஏழை நாடல்ல... ஏழையாக்கப்பட்டிருக்கும் நாடு என்பதை நிரூபிக்கும் விதத்தில் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது தொண்டு நிறுவனம் ஒனறு.

அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.64 லட்சம் கோடியாம் (1456 பில்லியன் டாலர்கள்)!!

இந்தியாவுக்கு தற்போதுள்ள வெளிநாட்டுக் கடனைவிட 13 மடங்கு அதிகம் இந்தக் கறுப்பு பணத்தின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

சமுதாயத்தில் மலிந்துவிட்ட லஞ்சம் மற்றும் நேர்மையின்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்கு எதிராக போராடவும் தேசத்தின் மதிப்பு மீட்பு அறக்கட்டளை (பவுண்டேஷன் பார் ரெஸ்டோரேஷன் ஆப் நேஷனல் வேல்யூஸ் -எப்.ஆர்.என்.வி.) என்ற அமைப்பை சுவாமி பூமானந்தா தொடங்கியுள்ளார்.

இந்த அமைப்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி எம்.என்.வெங்கடாச்சலய்யா, தொழிலதிபர் ரத்தன் டாட்டா, டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர் இ.ஸ்ரீதரன், மத்திய விஜிலென்ஸ் முன்னாள் கமிஷனர் என்.விட்டல், கல்வி ஆலோசகர் விபா பார்த்தசாரதி ஆகியோர் ஆலோசனைக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

சென்னையில் கிளை:

மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இந்த அமைப்பின் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் தமிழக கிளை நேற்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழா மற்றும் ஆலோசனை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நடந்தது.

பின்னர் இந்த அமைப்பின் தலைவர் சுவாமி பூமானந்தா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

உலக நாடுகளை அச்சுறுத்தும் அளவுக்கு இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒழுக்க நெறிமுறைகள், அறநெறிகள், மதிப்பீடுகள் இல்லாத வளர்ச்சி என்றாவது ஒருநாள் நிலைகுலைந்து போகும். நாட்டின் ஒழுக்க நெறிமுறைகளை மீட்டெடுக்கும் வகையில் ஊழலை ஒழிப்பதற்காக இந்த புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.

இதன்மூலம், ஊழலை அடிப்படையில் இருந்து ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவும், ஒழுக்கநெறிமுறைகள் தொடர்பான பாடங்களை ஆரம்பக் கல்வியில் சேர்க்கவும் முயற்சி எடுக்கப்படும். இந்த அமைப்பின் தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நவம்பர் மாதம் 18, 19ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைக்கிறார். இதில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

அதிர வைக்கும் கறுப்புப் பணம்!:

இந்தியாவின் கறுப்புப் பணத்தை முழுமையாக வெள்ளையாக்கினாலே போதும், முழுப் பிரச்சினையும் தீர்ந்து போகும். சுவீஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணம் மட்டும் ரூ.64 லட்சம் கோடி. இந்த தொகை இந்தியாவின் வெளிநாட்டு கடனை விட 13 மடங்கு அதிகம்.

அந்த பணத்தில் வெளிநாட்டு கடனை அடைத்துவிட்டு எஞ்சிய தொகையை வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டால் நாடு எங்கேயோ போய்விடும்.

மக்கள் மீது எந்த வரிச்சுமையும் விழாது. சுவீஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை அந்த வங்கியிடம் கேட்டுப்பெற்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இதைச் செய்ய முடியும் என்றார் பூமானந்தா.

அரசியலில் துவங்கும் முதல் ஊழல்!:

மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவின் முன்னாள் கமிஷனர் என்.விட்டல் கூறுகையில், நாம் நினைத்தால் ஊழலை எளிதில் ஒழிக்க முடியும். அதற்கு முதலில் நமது தேர்தல் நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். ஏனென்றால் முதல் ஊழல் அரசியலில்தான் துவங்குகிறது..

சுவீஸ் வங்கியில் பணம் போட்டிருக்கும் இந்தியர் பட்டியலை மத்திய அரசு நினைத்தால் கேட்டுப்பெற முடியும். ஆனால் இதை எல்லாம் செய்வார்களா? என்பது சந்தேகம்தான் என்றார் விட்டல்.