விண்வெளிக்கு செல்லும் லிப்ட்டை, உலகிலேயே முதல் முறையாக ஜப்பான் விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகின்றனர்.உலகம் முழுவதும், பல்வேறு துறை விஞ் ஞானிகளுக்கும், விண்வெளி குறித்து பல கனவுகள் உள்ளன. அதில் கற்பனைக்கு எட்டாத கனவாக, விண்வெளிக்கு ஒரு லிப்ட் என்பது இருந்தது. அது நிறைவேறும் தருணம் வந்துள்ளது.ஜப்பான் விஞ்ஞானிகள் எளிதாக இதை வடிவமைத்துள்ளனர். பூமியுடன் சேர்ந்து சுற்றும் செயற்கைக் கோள் ஒன்று விண்ணில் நிறுத்தப்படும்.
பூமியில் இருந்து, மிக வலுவான, அதே சமயம் பெரிதும் எடை குறைவான கேபிள்கள், செயற்கைக் கோளுடன் இணைக்கப்படும். பூமியில் இருந்து பெரிய லிப்ட் இயக்கப்படும். இதில், ஏராளமானோர் பயணம் செய்யலாம்; சூரிய ஒளி ஜெனரேட்டர்களை எடுத்துச் செல்லலாம்; கதிர்வீச்சு கழிவுப்பொருட்களை அடைத்து எடுத்துச் செல்லலாம். எத்தனை லிப்ட்கள் வேண்டுமானாலும் இயக்கலாம்."புவியீர்ப்பு சக்தியை முறியடித்து, லிப்டை இயக்குவது சிரமமான காரியம் அல்ல' என்று, ஜப்பான் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அதற்கு அதிக சக்தி தேவைப்படாது. இன்னும் சொல்லப்போனால், விண்கலத்தை ஏவு வதற்கு தேவைப்படும் சக்தியை விட, 100 மடங்கு குறைவான சக்தி இருந்தால் போதும். "வெளிநாடு செல்வது போல, யார் வேண்டுமானாலும், லிப்ட் மூலம் விண்வெளிக்கு செல்ல முடியும்' என்று கூறினார், இத்திட்டத்தின் தலைவர் சுயுசி ஒனோ. இந்த திட்டம், நாசா உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் உட்பட, சர்வதேச அளவில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. விண் வெளி லிப்ட் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு, இதற் கான வடிவமைப்பை சிறப்பாக தயாரித்து அளித்தால், கவர்ச்சிகரமான பரிசுகளும் அறிவிக்கப் பட்டுள்ளன.

.jpg)
No comments:
Post a Comment