Monday, February 2, 2009

ஈழம் நேற்றும் இன்றும் தலைப்பு(title song) பாடல்

ஈழம் நேற்றும் இன்றும் எனும்


மக்கள் தொலைகாட்சி தொடரில்

தலைப்பு(title song) பாடல் –எழுதியவர்

திரு.பச்சியப்பன்





தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே





வெடி விழுந்து எரிந்த பனை

கரை உடைந்து காய்ந்த குளம்

கூரை சரிந்த எமது இல்லம்

குருதி படிந்த சிறு முற்றம்





இரவை கிழித்த பெண்ணின் கதறல்

ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை

தேசம் பதுங்கு குழியின் உள்ளே

புதைய………………சம்மதமோ…………..





தாயே என்ன பிழை செய்தோமடி தாயே

தாயே என்ன பிழை செய்தோமடி தாயே





விளக்கேற்றிய மாடமெல்லாம்

வீழ்ந்து போனதோ…………..





ஊஞ்சலாடிய கம்பு இல்லை

நீந்தி பழகிய ஆறு இல்லை





என் தோப்பினுள் அலைந்த

பூங்குருவிகள் எங்கு போனதோ

என் தோட்டத்தில் ஈன்ற

தாய்பூனை என்ன ஆனதோ





முற்றம் தெளித்திட

விடியல் வருமோ

அர்த்த சாமத்தில்

வாழ்வு முடியுமோ


                                இந்த பாடல் ஒலி வடிவில் கிடைத்தால் .... கொடுத்து உதவுங்கள் ....

No comments:

Post a Comment